கலைஞர் மகளிர் உதவித்தொகை வருகிற அக்.14 அன்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது1

2023-10-07T13:40:42Z

Sivakumar

மொத்தம் ஒரு கோடி 63 லட்சம் குடும்பத்  தலைவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

ஒரு கோடியே 6 லட்சத்து ஐம்பதாயிரம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மாதந்தோறும் உதவித் தொகை வங்கி கணக்குக்கு செலுத்தப்படுகிறது

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இ சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட காரணம் குறுஞ்செய்தி வாயிலாக கைபேசிக்கு அனுப்பப்படுகிறது.

அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உதவித்தொகை அக்டோபர் 14ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

அக்டோபர் 15 ஆம் தேதி வங்கி விடுமுறை என்பதால் ஒருநாள் முன்னதாகவே உதவித்தொகை  பயனாளர்களுக்கு கிடைக்கும்.

ரூ. 1000 கிடைக்காமல் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும் அக்.14 கிடைக்க வாய்ப்புள்ளது